• கேள்விக்குறி

    கேள்விக்குறி 

    உடலில் சுரக்கும் இரத்தம்
    போல சுயநலம் ஊறியிருக்கும்
    மனிதர்களிடம்
    பொதுநலம் கேள்விக்குறி ?

    நகைத்து பேசி
    நயம் குறையாமல்
    நடிக்கும் மனிதர்கள்
    மத்தியில் உண்மை கேள்விக்குறி ?

    காமம் தேடும்
    சில காதலர்கள்
    மத்தியில்
    நேசம் கேள்விக்குறி ?

    காடுகள் கான்கிரீடாக
    மாறும் வேளையில்
    கார்மேகத்தின்
    கண்ணீர் கேள்விக்குறி ?

    விறகுகளின் நெருப்பு
    விதைக்கும் ஒரு வேளை
    உணவு
    விலைவாசி உயர்வு
    வாழ்க்கையின் கேள்விக்குறி ?

    சிலந்தியின் நெருக்கம்
    வீடுகள்
    குறுகும்தெரு
    நாளை வெள்ளத்தின்
    முன் எச்சரிக்கை கேள்விக்குறி ?

    கடற்கரைக்கு தடை
    விதிக்கும் வினோத அரசு
    வாக்கு அளித்த மக்களின்
    நிலை கேள்விக்குறி ?   

    விழித்து பார்த்து
    வையகம்
    மறைந்து போனால்
    வாழ்க்கை கேள்விக்குறி ?


    பிடித்த  வேலை
    கிடைக்கும் வரை
    பல கேள்விகளின்  பதில்
    ஒரு பெரிய கேள்விகுறி ?

    கேள்விகள் ஏராளம் அதன்
    பதில்கலோ பல
    சமயங்களில் கேள்விக்குறி ?


3 கருத்துக்கள்:

  1. Unknown சொன்னது…

    Arumaiyana kavidhai padhivu Mani... Innum niraya kelvikuriyana vishayangalin badhilgalai un kavidhai moolam solla vazhthugal...💐💐

  2. Unknown சொன்னது…
    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
  3. Manikandan Akila Annamalai சொன்னது…

    @yazhini vijay மிக்க நன்றி. உங்களின் ஒவ்வொரு கருத்தும் என் எழுத்தின் தரத்தையும்,சிந்தனையும் அதிகம் ஆக்கும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி

கருத்துரையிடுக