• மகிழினி - முதல் குரல்


    மகிழினி - முதல் குரல் 





    இரவுகள் நிலவை விழுங்க
    தொடங்கிய
    நேரம்.

    வலியில் முகம்
    சிவந்தாள் சக்தி.
    இவள் துடித்தால்
    ஓர் உயிரும்
    துடித்தது.

    போராட்டம் பெரிது இல்லை,
    துணை என்பவன் இல்லை
    என்பதால்
    இன்று
    அனாதை,
    நாளை
    ஒரு சிசு
    உரக்க சொல்லும் இவள்
    பெயர்.

    கத்தியின்றி இரத்தமின்றி
    ஒரு பிறப்பு,
    அமைதி கோப்பை
    உடைக்க பட,
    தொப்புள்கொடி அறுக்க
    சாயல் மாறாது
    புது உலகம்
    கண்டாள்.


    அழுகை இல்லை
    புன்னகையும் இல்லை
    முதல் போராட்டம்
    ஒலித்தது  முதல்
    குரல்
    உலகம்
    விழித்தது
    இவள் பேசும் அதிகாரம்
    இவள் "மகிழினி".




     


3 கருத்துக்கள்:

  1. Srinivasan KB சொன்னது…

    அருமை. வாழ்த்துக்கள்..!👍

  2. Unknown சொன்னது…

    Arumai Mani magizhini azhagu 😍

  3. Maniarasan Sivaseran சொன்னது…

    அருமை மணி . தொடருங்கள் .

கருத்துரையிடுக