• இழப்புகள்





    இழப்புகள் 


    உயிரோ 
    உறவோ 
    இழப்புகளின் 
    வலி 
    சதையயை தாண்டிய 
    உணர்வு.

    கண்கள் 
    வானம் பார்க்கவில்லை ,
    கால்களின் 
    தடம் பூமி
    ஏற்க்கவில்லை.

    ஏனோ 
    ஒரு குரல், 
    தாயின்றி தவிக்கும் 
    நான்கு உயிர்கள், 
    நான் அறிந்ததோ 
    இரண்டின் முகமே. 

    தாயின்றி
    தாய் பாலுக்கு  எங்கே 
    போவது, 
    கடும் குளிர்,
    பசி 
    செயற்கை, 
    சேய்
    ஏற்றுக்  கொள்ளுமோ ?

    என் கைகள் 
    சுகம் தரும் 
    வெப்பம் சலனமோ ?
    நக கூர்மை 
    கூச்சம் தானே,  
    அதன் அணைப்பு ஒரு 
    புது உணர்வு  தான். 

    மெல்லிய 
    சத்தம்  
    மெய்பொருள் 
    அறிந்திடாது.  

    சில உறவுகள் 
    சிறுது நேரத்தில் 
    மனதோடு பிணைந்து விடும், 
    ஒரு உயிர் 
    உறவாக மாறாத ? 

    பிறப்பிற்கு 
    அறிகுறியும் இல்லை 
    இறப்பிற்கு 
    காலம் போதவில்லை. 

    பிறந்து இறந்த 
    நான்கு பூனைகள். 
    உணர்வோடு கலந்த 
    உயிர்களின் 
    இழப்புகள் 
    என்றும் 
    மனதில் பாரமே 


1 கருத்துக்கள்:

  1. பெயரில்லா சொன்னது…

    நன்று

கருத்துரையிடுக