• நிலவிற்கு அன்று விடுமுறை


    நிலவிற்கு அன்று விடுமுறை 

    தனி படகில்
    நடு கடலில்
    அம்மாவாசை இரவில்
    அந்த நெடுந்தூர பயணம்.

    அன்று அந்த ஆழ்கடலில்
    மீன்கள் துள்ளி குதிக்கவில்லை
    காற்றின் வசையில்
    கடல் ததும்பவில்லை.

    நிலவு இல்லாத வானம்
    நட்சத்திரங்கள் நிறைந்த இரவு
    நிதானம் தந்த சிந்தனைகள்

    நீண்ட நேரம் மின்னும்
    நட்சத்திரம் என் துன்பம் என
    நினைத்து மீண்டும் மீண்டும்
    விரல் கொண்டு
    எண்ணி கொண்டு இருக்குறேன் 

    என்றோ தொலைத்த
    சிறு மீன்களை
    இன்று அந்த ஆழ்கடலில்
    தேட முனைந்தேன்.

    சிற்பியாய்  சேர்த்த நினைவுகளை
    நடுகடலில் ஒவ்வொன்றாய்
    எறிந்துவிட்டு
    மீண்டும் நாளை கடற்கரையில்
    தேடி சேர்த்து கொண்டு இருப்பேன். 

    அந்த ஆழ்கடல் தேடல்
    என்னுள்ளே என
    நினைத்து என்னை தொலைத்து
    கொண்டு இருக்குறேன்,
    அறிவொளியாய் இருக்கும்
    நிலவிற்கு அன்று விடுமுறை



0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக