• நீட் தராசு



    யார் பக்கம்
    பணம் அதிகமோ
    அவர் பக்கமே சாயும் தராசு

    பண வர்க்கம் பாதி
    சாதி வன்மம் பாதி

    உயிர் விட்டாள் ஒரு
    மாணவி
    உயிர் விட  செய்தார்களா,
    அரசியல் சதியா  ?

    இரங்கல் தெரிவித்து
    உத்தமன் ஆகும் சில
    ஆன்மாக்கள் .

    உயிரிலும் அரசியல்
    ஆதாயம் தேடும்
    அறிவற்ற சில
    அறிஞர்கள்


    நேர்பட பேசிட
    யாரும் இல்லை
    நீதி வழங்க
    நீதி தேவையும் இல்லை
    எங்கு போவானோ
    எம் நாட்டு மக்கள்

    நிவாரணம் வேண்டி
    உயிர் பிரியவில்லை
    உயிர் காக்க ஓர்
    உயிர் பிரிந்தது


    கல்வியின் தரமும்
    சரி இல்லை
    கல்வியும் சரிசமமாய்
    இல்லை

    கல்வி என்ற நீர்
    நிலைகளில்  சாக்கடை
    தரமற்ற
    அரசியல் தொழிற்சாலைகளின்
    கழிவுகளே.

    கனவாய் மாறும்
    சில கனவுகள்
    கருவில் காற்றும்
    இல்லை
    சுதந்திரமும் இல்லை


    இனியும் கனவுகள்
    மெய்பட வேண்டும்
    உயிர் துறந்த ஓர் உயிர்
    பல உயிர் காக்கும்
    நாள் மீண்டும் வரும்
    மீண்டு வருவாள்




0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக