• என் இனிய தனிமையே



    என் இனிய தனிமையே

    நம்பிக்கை கண்மூடி தனமாய்ப் போன பின்பு
    நட்பு தான் எல்லாம் சரி செய்யும் என்ற நிலையில்
    நட்பில் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தந்த போது
    நடைபிணமாய் இருந்தபோது
    என்னுடன் நட்பு பாராட்டியதும் 
    தனிமையே.

    தோல்விகள் தோளை தோற்றி கொண்ட போதும்
    ஊரே தூற்றிய  போதும் 
    தோழனாய் தோள் கொடுத்ததும் 
    தனிமையே.

    காலம் கடந்து வாழ்வோம்
    காதல் கொண்டு  வாழ்வோம் என்று சொல்லி
    காதலும் கடந்து போகும் 
    என்ற நிலை  வந்த போதும்
    காதலாய் காதலை கடக்க துணை நின்றதும் 
    தனிமையே.

    துயரம் யாவும் நிரந்தரம் இல்லை
    குறைகள் ஒரு போதும் குறையில்லை என்றும்
    தற்கொலை தீர்வு இல்லை என உணர்த்தியம் 
    தனிமையே.

    பிரிந்து வாழ்ந்தாலும்
    பிரிவுகள் நேரம், காலம் கடந்து
    பிணைக்கும் எம் உறவுகளோடு என்று அன்பை
    பகிரும் ஒவ்வொரு நொடி உணர்த்தியதும்   
    தனிமையே.

    நோய் என்று
    தனித்திருக்கும் ஒவ்வொரு
    நொடியும் புதிது அல்ல
    எண்ணங்களையும் என்னையும்  ஆளும்
    பல சமயங்களில் 
    என்னை என்னையே நேசிக்க வைத்ததும் 
    தனிமையே.

    கோபம் தணிக்க
    கண்ணீர் சிந்த
    சிந்தனை சிறக்க
    வாசிப்பைப் பெருக்க
    இயற்கை ரசிக்க
    எப்போதும் தேடியது
    என் இனிய தனிமையே. 




0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக